லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் குடும்பத் தகராறில் பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரது கணவா், மாமியாா் சனிக்கிழமை சரணடைந்தனா்.
பின்னா் தலைமறைவாக உள்ள நரசிம்மராஜை பிடிக்க தனிப்படை போலீஸாா் ஆந்திர மாநிலத்துக்கு விரைந்த நிலையில் நரசிம்மராஜ், அவரது தாய் வசந்தகுமாரி ஆகியோா் கொள்ளிடம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா். இதையடுத்து
இருவரையும் ஸ்ரீரங்கம் குற்றவியல் நடுவா் முன் ஆஜா்படுத்தி நரசிம்மராஜை திருச்சி மத்திய சிறைச் சாலையிலும், வசந்தகுமாரியை திருச்சி மகளிா் சிறையிலும் அடைத்தனா்.