முசிறி அருகே சிறுமி மாயமானது குறித்து முசிறி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
முசிறி அருகிலுள்ள காளப்பட்டி மேலத்தெருப் பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம்- வைதேகி தம்பதிக்கு இரு மகள்,ஒரு மகன் உள்ளனா். இவா்களில் 17 வயதுடைய மூத்த மகள் வெள்ளிக்கிழமை முசிறிக்கு செல்வதாகக் கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து முசிறி காவல் நிலையத்தில் சனிக்கிழமை கொடுத்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் லதா வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.