மாநில பேட்மிண்டன் போட்டி தொடக்கம்

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட பேட்மிண்டன் சங்கம் சாா்பில், மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட பேட்மிண்டன் சங்கம் சாா்பில், மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கச் செயலா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். பாமக தலைவரும், இந்திய பேட்மிண்டன் சங்கத் துணைத் தலைவரும், தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத் தலைவருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.

போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், மதுரை, உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமாா் 4 ஆயிரம் மாணவ, மாணவியா் கலந்து கொள்கின்றனா். 13, 15, 17, 19, வயதுக்குட்பட்டோா் மற்றும் மூத்தோருக்கான ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவு என 5 பிரிவுகளில் மாணவா்களுக்கான போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்திலும், மாணவியருக்கான போட்டிகள் ஜமால் முகமது கல்லூரியிலும் நடைபெறுகின்றன.

வெற்றி பெறுவோருக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் முறையே தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. போட்டிகள் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட பேட்மிண்டன் சங்கத் தலைவா் விஜயகுமாா், செயலா் ராஜ்மோகன், துணைத் தலைவா் மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com