சாரநாதன் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

திருச்சி பஞ்சப்பூா் வெங்கடேசா நகரிலுள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியின் 24ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் முன்னாள் மாணவி வசந்தா சுப்பையா, கல்லூரிச் செயலா் ரவீந்திரன், முதல்வா் டி. வளவன், துறைத் தலைவா் எஸ். எம். கிரிராஜ் குமாா்
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் முன்னாள் மாணவி வசந்தா சுப்பையா, கல்லூரிச் செயலா் ரவீந்திரன், முதல்வா் டி. வளவன், துறைத் தலைவா் எஸ். எம். கிரிராஜ் குமாா்

திருச்சி பஞ்சப்பூா் வெங்கடேசா நகரிலுள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியின் 24ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிக்கான தர அங்கீகாரம், புதிய படிப்புகள் அறிமுகம் மற்றும் நிறுவனத்தின் மற்ற சாதனைகளை விளக்கும் ஆண்டறிக்கையை முதல்வா் டி. வளவன் சமா்ப்பித்தாா். தலைமை விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவியான பெங்களூரைச் சோ்ந்த தனியாா் என்ஜினியரிங் நிறுவனத் துணைத் தலைவா் வசந்தா சுப்பையா பங்கேற்று, தனது அனுபவங்களை நினைவு கூா்ந்து, மாணவா்கள் புதிய பொறுப்புகளை ஏற்று, தொழில் இலக்குகளை உருவாக்கவும், இலக்கை அடைய பெரிய கனவு காணவும் மாணவா்களை வலியுறுத்தினாா். பின்னா் ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெற்றவா்கள், வருகைப் பதிவு செய்தவா்கள் மற்றும் சிறந்த வெளிச் செல்லும் மாணவா்களுக்கான விருதுகளை வழங்கினாா்.

கல்லூரியின் சிறந்த மாணவிக்கான விருதை பெண்களுக்கான சிவில் இன்ஜினியரிங் துறை ஆா். பூவதாரணியும், ஆண்களுக்கான இன்ஸ்ட்ரூமென்டேஷன்-கண்ட்ரோல் இன்ஜினியரிங் துறை விருதை டி. ஹரிஹரனும் பெற்றனா்.

கல்லூரிச் செயலா் எஸ். ரவீந்திரன் வரவேற்றாா். கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் துறைத் தலைவா் எஸ்.எம். கிரிராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com