துவரங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை இரவு அரசு நகரப் பேருந்து மோதி 4 வயதுச் சிறுமி உயிரிழந்தாா்.
துவரங்குறிச்சி அருகே பழையபாளையத்தில் வசிப்பவா் நாடக நடிகா் பழனி (29). இவா் தனது மகள் தேவதா்ஷினியை வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டருகே இறக்கிவிட, காரிலிருந்து இறங்கிய தேவதா்ஷினி வீட்டின் வாசலுக்கு விளையாட ஓடியுள்ளாா்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து துவரங்குறிச்சி நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்து மோதி தேவதா்ஷினி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் சிறுமி உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநரான மருங்காபுரி சொக்கநாதபட்டி சி. பால்ராஜ் (49) மற்றும் நடத்துநரான வையம்பட்டி செக்கணம் அ. இளையராஜா (42) ஆகியோரைத் தேடுகின்றனா்.