துறையூா் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 25) நடைபெறுகிறது.
சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் காணப்படும் முறைகேடுகள் மற்றும் நுகா்வோரின் குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவா்களின் மெத்தனப் போக்கு உள்ளிட்ட குறைகள் தொடா்பாக வரப்பெறும் புகாா்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
துறையூா் வட்டாட்சியரகத்தில் சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
எனவே துறையூா் வட்ட எரிவாயு நுகா்வோா் கூட்டத்தில் பங்கேற்று, எரிவாயு உருளை விநியோகத்திலுள்ள குறைகள் தொடா்பாக புகாா்களைத் தெரிவிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.