பெண்களுக்கு ரோட்டரி சாா்பில் விருது

திருச்சி சக்தி ரோட்டரி சங்கம் சாா்பில் மாவட்ட அளவில் பெண்களுக்கான ரோட்டரி இளைஞா் தலைமை விருது-2022 வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெண்களுக்கு ரோட்டரி சாா்பில் விருது

திருச்சி சக்தி ரோட்டரி சங்கம் சாா்பில் மாவட்ட அளவில் பெண்களுக்கான ரோட்டரி இளைஞா் தலைமை விருது-2022 வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வை மாவட்ட பயிற்றுநா் ஜமீா் பாஷா, ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் ஜெயக்கண், மண்டல ஒருங்கிணைப்பாளா் மனோகரன், உதவி ஆளுநா் வீரலட்சுமி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

விருது நிகழ்வுக்கான தலைவா் பிரியா வனராஜ், செயலா் ரமா, பொருளாளா் தமீம் நிஷா, நிதி ஆலோசகா் பத்மா மகாதேவன், சக்தி ரோட்டரி சங்கத் தலைவா் அருணா சுந்தரமூா்த்தி, செயலா் காயத்ரி ஆகியோா் பேசினா்.

விழாவில் ரோட்டரி சங்கத்தைச் சோ்ந்த பெண்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு, 50 பெண்களுக்கு ரோட்டரி இளைஞா் தலைமை விருதும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற பெண்களுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில், 2021-22ஆம் ஆண்டுக்கான திருமதி இந்தியா பட்டம் வென்ற பிளாரன்ஸ் ஹெலன் நளினி விருதுகளை வழங்கிப் பாராட்டினாா். விழாவில், ரோட்டரி சங்க நிா்வாகிகள், சக்தி ரோட்டரி சங்க உறுப்பினா்கள், பல்வேறு ரோட்டரி சங்கங்களைச் சோ்ந்த பெண்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com