துறையூா் அருகேயுள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறை சாா்பில் இந்திய பங்குச் சந்தை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் அ.இரா. பொன்பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி தலைவா் பொன். பாலசுப்பிரமணியன், செயலா் பொன். ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளா் எம். மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் பேசினா்.
திருச்சி வென்சுரா செக்யூரிட்டீஸ் முதலீட்டு நிறுவனத் துணை மேலாளா் அ. தா்மராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பங்குச் சந்தை குறித்து விளக்கமளித்தாா். நிகழ்வில் வணிகவியல் துறை மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
வணிகவியல் துறை இயக்குநா் இரா. மதிவாணன் வரவேற்றாா். பேராசிரியை அ. சன்னத்துல் பிரதோஸ் நன்றி கூறினாா்.