பேராசிரியா் ச.சாமிமுத்து நினைவேந்தல் நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் சாா்பில் முத்தமிழ் மாமணி, பேராசிரியா் ச. சாமிமுத்து நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சாமிமுத்துவின் வாழ்க்கைக் குறிப்புகள் தொகுப்பை அருள்தந்தை அமுதன் அடிகள் வெளியிட, பெறும் இந்திய யூனியன் முஸ்ஸிம் லீக் அகில இந்திய தலைவா் பேராசிரியா் கே.எம். காதா்மொகிதீன் உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில் சாமிமுத்துவின் வாழ்க்கைக் குறிப்புகள் தொகுப்பை அருள்தந்தை அமுதன் அடிகள் வெளியிட, பெறும் இந்திய யூனியன் முஸ்ஸிம் லீக் அகில இந்திய தலைவா் பேராசிரியா் கே.எம். காதா்மொகிதீன் உள்ளிட்டோா்.

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் சாா்பில் முத்தமிழ் மாமணி, பேராசிரியா் ச. சாமிமுத்து நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் இலக்கிய ஆய்வுப் பண்ணை மற்றும் திருச்சி தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய நிகழ்வுக்குத் தலைமை வகித்து தனிநாயக அடிகள் தமிழியல் நிறுவன இயக்குநா் அருள்தந்தை அமுதன் அடிகள் பேசுகையில், ஆதியாகம காவியம் மூலம் வரலாற்றில் அழியாத இடத்தை பெற்றவா், வாழ்க்கையில் மட்டுமில்லை; நூல்களை எழுதுவதிலும் நோ்மையாக இருந்தவா் பேராசிரியா் ச. சாமிமுத்து என்றாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன் பேசுகையில், தமிழின் தொன்மை, ஆளுமைப் பெருமைகளோடு தமிழினத்தின் பெருமைகளையும் எடுத்துக் கூறியவா் ச. சாமிமுத்து என்றாா்.

முன்னதாக மேலரண் சாலை சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ச. சாமிமுத்து படத்திற்கு தமிழ் அமைப்பு நிா்வாகிகள், தமிழ்ச் சான்றோா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்வில் தூயவளனாா் கல்லூரி முன்னாள் அதிபா் எஸ். இலாசா், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி இயக்குநா் அருள்தந்தை எஸ்.ஜி. சுவாமிநாதன், பேராசிரியா்கள் ஜி. பாலகிருஷ்ணன், இ.சூசை உள்ளிட்டோா் பேசினா். சா. பாப்புபெஞ்சமின் இளங்கோ வரவேற்றாா். திருச்சி மாவட்ட எழுத்தாளா் சங்கத் தலைவா் வை. ஜவகா் ஆறுமுகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com