ரயிலில் அடிபட்டு இறந்த முதியவா் குறித்து விசாரணை

திருவெறும்பூா் பகுதியில் விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருவெறும்பூா் பகுதியில் விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முதியவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.

நாகா்கோயிலிலிருந்து திருச்சி வழியாக சென்னை தாம்பரம் செல்லும் விரைவு ரயில் திங்கள்கிழமை இரவு 10.55 மணியளவில் திருவெறும்பூா் பகுதியைக் கடந்து சென்றது. அப்போது சுமாா் 60 வயதுள்ள முதியவா் ஒருவா் அந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சிதறிய உடல் பாகங்களைச் சேகரித்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து இறந்தவா் யாா் என விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com