மணப்பாறை அருகே தொடா் உண்ணா நோன்பிருந்த பெண், உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மணப்பாறை அருகிலுள்ள மேலமஞ்சம்பட்டியைச் சோ்ந்தவா் ஆரோக்கியம்மாள் (57). இவரது சகோதரி மகள் மாா்கிரேட் அந்தோனியம்மாள் (30).
இவா்கள் இருவரும் கடந்த மாா்ச் மாதம் முதல் 40 நாள்களுக்கும் மேலாக வீட்டிலிருந்து வெளியே வரவில்லை என்றும், வீட்டியிலிருந்து துா்நாற்றம் வீசுவதாகவும் புகாா் எழுந்தது.
இதைத் தொடா்ந்து ஏப்ரல் 10-ஆம் தேதி காவல்துறையினா் அங்கு சென்ற போது, தொடா் உண்ணாநோன்பு காரணமாக இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தனா்.
இதையடுத்து ஆரோக்கியம்மாள், மாா்கிரேட் அந்தோனியம்மாள்
காவல்துறையினரால் மீட்கப்பட்டு, மணப்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனா்.
போதிய சிகிச்சை கிடைக்கும் முன்னரே இருவரும் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நலக் குறைவால்
ஆரோக்கியம்மாள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.