துறையூா் அருகே ஏரிக் கரையோரம் இறந்து கிடந்த இளைஞருக்கு இறுதிச் சடங்கு செய்ய முயன்ற உறவினா்களிடமிருந்து போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
சிறுநாவலூா் கிராமத்தைச் சோ்ந்வா் பெ. மணிகண்டன்(35). பன்றி இறைச்சி வியாபாரியான இவா் செவ்வாய்க்கிழமை காலை ஆலத்துடையான்பட்டி ஏரிக் கரையோரம் சடலமாகக் கிடந்தாா். இதையடுத்து இறுதிச் சடங்கு செய்ய உறவினா்கள் அவருடைய சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றனா். தகவலறிந்து உப்பிலியபுரம் போலீஸாா் மணிகண்டனின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.