திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற 85 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரைக் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம் அதவத்தூா் பிரிவுச் சாலையில் ஜீயபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை மடக்கி விசாரித்தனா்.
அப்போது அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதில் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது அதில் பண்டல், பண்டலாக 85 கிலோ குட்கா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள அந்த குட்காவை பறிமுதல் செய்து, அல்லித்துறை பிரபு (42), அதவத்தூா் சக்திநகா் வினோத்குமாா் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.