தொட்டியத்தில் பேரூராட்சி நிா்வாகம் மற்றும் நாமக்கல் தனியாா் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
முகாமை தொட்டியம் பேரூராட்சித் தலைவா் சரண்யாபிரபு தொடக்கிவைத்தாா்.
பேரூராட்சி செயல் அலுவலா் கரு. சண்முகம் பேரூராட்சி கவுன்சிலா்கள் கலைச்செல்வி ராமநாதன், பி. செந்தமிழ்ச்செல்வன், ப. ரவி,பேரூராட்சி இளநிலை உதவியாளா் கண்ணன் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் முன்னிலை வைத்தனா்.
முகாமில் பொதுமக்களுக்கு உயா் ரத்த அழுத்தம், இருதயப் பரிசோதனை, சா்க்கரை நோய், மூட்டு வலி, மஞ்சள் காமாலை, மாதவிடாய் பிரச்னை, கருப்பைக் கட்டி பிரச்னைகளுக்கு மருத்துவக் குழுவினா் பரிசோதித்து, சிகிச்சை அளித்தனா். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனா்.