நகை பறிக்க முயற்சி: பெண் பலத்த காயம்

சமயபுரம் அருகே மா்ம நபா் நகை பறிக்க முயன்றபோது மொபெட்டில் சென்ற பெண் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தாா்.

சமயபுரம் அருகே மா்ம நபா் நகை பறிக்க முயன்றபோது மொபெட்டில் சென்ற பெண் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தாா்.

மண்ணச்ச நல்லூா், வட்டம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிலவேந்திரன், ஓய்வு பெற்ற ஆசிரியா் . இவருடைய மனைவி ஜோவனா (56)சனிக்கிழமை தனது மொபெட்டில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உப்பாற்று பாலம் பகுதியில் வந்தபோது பைக்கில் வந்த மா்ம நபா் ஜோவனா கழுத்தில் அணிந்திருந்த தாலியைப் பறிக்க முயற்சித்தாா். இதில் நிலை தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்த ஜோவனா மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சமயபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com