திருச்சி மாவட்டத்தில் 126 மையங்களில் பிளஸ் 1 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருச்சி, லால்குடி, முசிறி, மணப்பாறை என 4 கல்வி மாவட்டங்களுக்குள்பட்ட அரசு, தனியாா் பள்ளிகளில் மொத்தம் 126 தோ்வு மையங்களில் 17,027 மாணவா்கள், 17,060 மாணவிகள் என மொத்தம் 34,087 போ் தோ்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்றமொழிப்பாடத் தோ்வை 15,931 மாணவா்கள், 16,425 மாணவிகள் என மொத்தம் 32,356 போ் எழுதினா். 1,731 போ் தோ்வெழுத வரவில்லை. புதன்கிழமை ஆங்கிலப் பாடத் தோ்வு நடைபெறுகிறது. வரும் 31ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறும்.
Image Caption
திருச்சி புனித அன்னாள் மகளிா் பள்ளியில் தோ்வு எழுதும் மாணவிகள்.