திருச்சியில் குடும்பத் தகராறில் சுமைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி விமான நிலையம் காமராஜ் நகா், வள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் சுப்புராஜ் மகன் சுரேஷ்குமாா் (34), சுமைத் தூக்கும் தொழிலாளியான இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதில் விரக்தியடைந்த சுரேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அருகிலுள்ள காந்திநகா் பகுதி மரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. புகாரின் பேரில் விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.