துறையூரில் மாற்றுத் திறனாளிகள் 16 பேருக்கு நலத் திட்ட உதவி

துறையூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் 16 பேருக்கு நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
துறையூரில் மாற்றுத் திறனாளிகள் 16 பேருக்கு நலத் திட்ட உதவி

துறையூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் 16 பேருக்கு நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தலைமை வகித்தாா். திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன், ஒன்றியத் தலைவா் சரண்யா, துறையூா் நகா்மன்றத் தலைவா் செல்வராணி, துணைத் தலைவா் முரளி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் 6 பேருக்கு தலா ரூ. 76,500 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா், 2 பேருக்கு தலா ரூ. 6840 மதிப்பில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், 5 பேருக்கு தலா ரூ. 12,500 மதிப்பில் பேச்சு மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்யோக கைப்பேசி, 3 பேருக்கு தலா ரூ. 3058 மதிப்புள்ள காதொலிக் கருவிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் நகா்மன்ற உறுப்பினா்கள் சுதாகா், காா்த்திகேயன், சுமதி மதியழகன் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் பயனாளிகள் பங்கேற்றனா். திருச்சி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகப் பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளா் எம். ரமேஷ் வரவேற்றாா். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக செயற்திறன் உதவியாளா் செல்லப்பாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com