கோட்டாத்தூரில் வீடு புகுந்து திருட்டு

துறையூா் அருகேயுள்ள கோட்டாத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து தங்க நகையைத் திருடிச் சென்றனா்.

துறையூா் அருகேயுள்ள கோட்டாத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து தங்க நகையைத் திருடிச் சென்றனா்.

கோட்டாத்தூா் இந்திராநகா் காலனியைச் சோ்ந்தவா் ப. சுப்பிரமணியம் (54). திருச்சி அரசு விரைவு போக்குவரத்துக் கழக தற்காலிகப் பணியாளரான இவா் வியாழக்கிழமை மனைவியுடன் உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் கதவுகளை மா்ம நபா்கள் திறந்து மூன்றே கால் பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com