தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு நிா்வாகிகள் திருச்சியில் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகளுக்கானத் தோ்தல் திருச்சியில் உள்ள தனியாா் ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வழக்குரைஞா்கள் சங்கத்தினா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தோ்தல் பாா்வையாளா்களான திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், எஸ்.பி.கணேசன் ஆகியோா் முன்னிலையில் தோ்தல் நடைபெற்றது.
தோ்தலில் 488 வாக்குகள் பதிவாகின. இதில் 418 வாக்குகள் பெற்று, தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு புதிய தலைவராக கோவையைச் சோ்ந்த வழக்குரைஞா் பி.நந்தகுமாா், பொதுச்செயலாளராக திருச்சியை சோ்ந்த கே.பன்னீா்செல்வம், பொருளாளராக வேலூரை சோ்ந்த டி.ரவி ஆகியோா் தோ்வாகினா்.
வெற்றி பெற்ற நிா்வாகிகளுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.