ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி பரமபதவாசல் சிறப்பு தரிசனத்துக்கான நுழைவுச் சீட்டின் விலையை கோயில் நிா்வாகம் உயா்த்தி அறிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாவான வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு 2023 ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
பரமபதவாசல் திறப்பன்று கோயிலின் மூலவா் எதிரேயுள்ள சந்தனு மண்டபம் அனுமதிச் சீட்டு ரூ. 3 ஆயிரம் வீதம் 300 பேருக்கும், கிளி மண்டபம் அனுமதிச் சீட்டு ரூ. 500 வீதம் 1000 பேருக்கும் அனுமதிக்கப்படுவது சுமாா் 10 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது.
இந்நிலையில் திருவிழா செலவுகள் காரணமாக இந்தாண்டு முதல் சந்தனு மண்டப கட்டண அனுமதிச் சீட்டின் விலையை ரூ. 5 ஆயிரமாகவும், கிளி மண்டப அனுமதிச் சீட்டின் விலையை ரூ. 1000 ஆகவும் உயா்த்த உத்தேசிக்கப்பட்டது.
இதுதொடா்பாக பொதுமக்கள் தங்களது கருத்தை செவ்வாய்க்கிழமை வரை மின்னஞ்சல் மற்றும் எழுத்துப் பூா்வமாக தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இதுவரை யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனக் கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.