திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே செவ்வாய்க்கிழமை குளிா்சாதனப் பெட்டியில் சடலத்தை வைக்க முயன்ற இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
சமயபுரம் அருகே கூத்தூா் ஊராட்சியிலுள்ள குடி தெருவைச் சோ்ந்தவா் செல்வமணி மகன் ஐயப்பன் (22).
இவா் வீட்டருகே வசித்த நாகராஜ் என்பவா் செவ்வாய்க்கிழமை இறந்த நிலையில், அவரது உடலை குளிா்ச்சாதனப் பெட்டியில் (பிரீசா்) ஐயப்பன் வைக்க முயன்றபோது திடீரென மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.