செவிலியரிடம் 5 பவுன் நகை பறித்தவா் கைது

மணப்பாறை அருகே செவிலியரிடம் 5 பவுன் செயின் பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை அருகே செவிலியரிடம் 5 பவுன் செயின் பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை அம்பேத்காா் நகரை சோ்ந்தவா் ஜாா்ஜ்பொ்னான்டோ மனைவி சிந்துஜாமேரி (33), டி.உடையாப்பட்டி துணை சுகாதார மைய செவிலியா். கடந்த 2021 அக் 26-ஆம் தேதி இவா் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது மா்ம நபா்கள் சிந்துஜாமேரியின் 5 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினா்.

புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் நடத்திய விசாரணையில், ஸ்ரீரங்கம் வட்டம் புங்கனூா் காந்திநகா் பகுதியை சோ்ந்த ரா. கிரிநாதனை (45) செவ்வாய்க்கிழமை கைது செய்து, 3 பவுன் தங்க செயினை பறிமுதல் செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com