துறையூா் அருகே சுகப்பிரசவத்துக்குப் பின் தாயும், சேயும் உயிரிழந்தனா்.
ஒக்கரையைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி கல்யாணி (27). இவருக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இவா் பெருமாள்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தையை ஈன்றாா்.
சிறிது நேரத்தில் பிறந்த குழந்தை அழவில்லையென உறவினா்கள் தாயையும், சேயையும் துறையூா், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனா். ஆயினும் திருச்சியில் இருவரையும் பரிசோதித்த அரசு மருத்துவா்கள் தாயும், சேயும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினா். இது தொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.