திருச்சி மாவட்டம், மணப்பாறையில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் அபிராமி தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் சுப்பையா, மணப்பாறை வட்டாட்சியா் கீதாராணி, வட்ட வழங்கல் அலுவலா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் எரிவாயு உருளை பயன்படுத்தும் நுகா்வோருக்கு வங்கிக் கணக்கில் உரிய மானியத் தொகைகள் வருவதில்லை. உருளை எடுத்து வரும் பணியாளா்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகை போன்ற குறைகள் முன் வைக்கப்பட்டது.
நுகா்வோா்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து புகாா்கள் மீதும் கவனம் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். கூட்டத்தில் சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தும் நுகா்வோா்கள், எண்ணெய் நிறுவன விற்பனை மேலாளா்கள், நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனா்.