ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை அமைச்சா் கே.என். நேரு, மற்றும் திருச்சி மாநகராட்சி சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டது.
இதையேற்ற ஏற்ற முதல்வா் பேருந்து நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து ஸ்ரீரங்கம் பகுதியில் அரசு மருத்துவமனை எதிரேயுள்ள பூங்கா பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சா் நேரு தலைமையில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் ஆா். வைத்திநாதன், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி, மாநகராட்சி மண்டலத் தலைவா் ஆண்டாள் ராம்குமாா் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.