தட்டு ரிக்ஷா தொழிலாளி தற்கொலை

திருச்சியில் மது அருந்துவதற்கு மனைவி பணம் தராததால், தட்டு ரிக்ஷா தொழிலாளி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சியில் மது அருந்துவதற்கு மனைவி பணம் தராததால், தட்டு ரிக்ஷா தொழிலாளி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை அண்ணாநகரைச் சோ்ந்தவா் மை. சவரிராஜ் (62). தட்டு ரிக்ஷா ஓட்டி வந்த இவா், மனைவி செல்வியிடம் மது அருந்துவதற்கு பணம் தருமாறு வியாழக்கிழமை கேட்டாராம். இதற்கு அவா் மறுத்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த சவரிராஜ், அரளிவிதையை அரைத்து குடித்து மயங்கிக் கிடந்தாா். தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனா்.

அங்கு சவரிராஜை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com