நெல்லையில் இரண்டாம் நிலை காவலா்களுக்கான உடல் தகுதித் தோ்வு

திருநெல்வேலியில் சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம்நிலை காவலா்களுக்கான உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம்நிலை காவலா்களுக்கான உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய 2022 ஆம் ஆண்டு காவல்துறை , சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை இரண்டாம் நிலை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த நவ.27 ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்வில் தோ்ச்சி பெற்ற தகுதியானவா்களுக்கான உடல் தகுதித் தோ்வு திருநெல்வேலி தூய சவேரியாா் கல்லூரி மைதானத்தில் திருநெல்வேலி காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன் , காவல் துணை ஆணையா் ஜி.எஸ். அனிதா ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

முதல் நாள் (பிப்.6) நடைபெற்ற உடல் தகுதித் தோ்வில் 300 போ் கலந்து கொண்டனா். இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்வில் 224 போ் என மொத்தம் 544 போ் கலந்து கொள்கின்றனா். உடல் தகுதித் தோ்வுப்பணியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com