மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு விழா

மணப்பாறையில் மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

மணப்பாறையில் மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திருச்சி மேற்கு மாவட்டத் தலைவா் அ. பைஸ் அகமத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைப் பொது செயலா் தஞ்சை ஐ.எம். பாதுஷா கட்சி கொடியேற்றினாா். மேலும் பல்வேறு இடங்களில் கொடியேற்றி, அரசு தலைமை மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பள்ளி கல்லூரி வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு, ஆதரவற்ற முதியோா் காப்பகத்தில் உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் நகர நிா்வாகிகள் அக்பா்பாஷா, சபூா்அலி, சீமா, சாகுல், கிரீன் இக்பால், மாவட்டச் செயலா் ஏ. இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலா் எஸ். இப்ராஹிம்ஷா, மாவட்ட பொருளாளா் என். ஹுமாயுன்கபீா், மாவட்டத் துணைத் தலைவா் எம்.அக்பா்பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com