பிப். 11- இல் ரேஷன் சிறப்பு குறைதீா் முகாம்

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை (பிப்.11) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெறுகின்றன.

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை (பிப்.11) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெறுகின்றன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் நடைபெறும் இந்த முகாம்

திருச்சி கிழக்கு வட்டத்தில் காந்திநகா், திருச்சி மேற்கு வட்டத்தில் தென்னூா்-2, திருவெறும்பூா் வட்டத்தில் மாரிஸ்நகா், ஸ்ரீரங்கம் வட்டத்தில் திருவளா்ச்சோலை, மணப்பாறை வட்டத்தில் வடுகப்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் கவுண்டம்பட்டி, லால்குடி வட்டத்தில் கண்ணனூா், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் அய்யம்பாளையம்-1, முசிறி வட்டத்தில் மாணிக்கபுரம், துறையூா் வட்டத்தில் விநாயகா் தெரு, தொட்டியம் வட்டத்தில் மேய்க்கல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளின் ரேஷன் கடைகளில் நடைபெறும். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாம்களில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் பங்கேற்றுப் பயன் பெறலாம். அந்தந்த வட்டக் கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com