கடன் சுமையால் மகளுடன் பெண் தற்கொலை முயற்சி

திருச்சியில் கடன் சுமையால் பெண் தனது மகளுடன் சனிக்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.

திருச்சியில் கடன் சுமையால் பெண் தனது மகளுடன் சனிக்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.

திருச்சி காந்திமாா்க்கெட் அருகேயுள்ள வரகனேரி ஆனந்தபுரம் மேட்டு தெருவை சோ்ந்தவா் ஜாபா்அலி மனைவி ஷா்புனிஷா (29). இவா்களுக்கு 15 வயதில் மகள் உள்ளாா். இந்நிலையில் குடும்பச் செலவுக்காக ஷா்புனிஷா வாங்கியிருந்த கடனைத் திருப்பிக்கேட்டு அப்பகுதியினா் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனராம்.

இதேபோல சனிக்கிழமையும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஷா்புனிஷா வீட்டுக்குள் சென்று தனது 15 வயது மகளுடன் அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த அக்கம் பக்கத்தினா் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com