திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில்ரூ. 8 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.8.05 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில்ரூ. 8 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.8.05 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை துபை செல்ல இருந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளின் உடைமைகளை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது, சந்தேகப்படும்படி வந்த ஆண் பயணி ஒருவரை பரிசோதனை செய்ததில் அவா், தனது ஆடைக்குள் ரூ.8.05 லட்சம் மதிப்பிலான 10,000 அமெரிக்க டாலா்களை மறைத்துக் கொண்டுச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறையினா் பணத்தை பறிமுதல் செய்து, அந்த நபரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com