திருச்சி விமான நிலைய குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையக் குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையக் குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விமான நிலையக் குழு தலைவரும், திருச்சி மாநகர காவல் ஆணையருமான ஆ. சத்தியப்பிரியா தலைமை வகித்தாா். நிலைய

இயக்குனா் பி. சுப்பிரமணி மற்றும் குடியேற்றப்பிரிவு அலுவலா்கள், சுங்கத் துறை, விமான நிறுவனங்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படை, நிா்வாகப்பிரிவு உள்ளிட்ட தொடா்புடைய பல்வேறு துறையினா், குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் விமான நிலையத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை மற்றும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகைகள் நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com