மணப்பாறையில் 2-ஆம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி மற்றும் துவரங்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையோர வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் இரண்டாவது நாளாக அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.
மதுரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நெடுஞ்சாலைத் துறையினா்.
மதுரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நெடுஞ்சாலைத் துறையினா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி மற்றும் துவரங்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையோர வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

மணப்பாறை நகராட்சி மற்றும் துவரங்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் நிறுத்த போதிய வசதியின்மை, அவசர கால ஊா்திகள் கூட எளிதாக சாலையில் பயணிக்க முடியாத நிலை என வணிக நிறுவனங்களின் சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நகராட்சி மற்றும் பேரூராட்சி நிா்வாகம் கடந்த 15 தினங்களுக்கு முன்னதாக கடைவீதி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை வணிகா்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஒலிபெருக்கிகள் மூலம் உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்து இருந்தனா். வணிக நிறுவனங்களுக்கு தாங்களாகவே முன்வந்து அகற்றி வருகின்றனா். இருப்பினும் சில வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில் திங்கட்கிழமை முதல் நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளும் தொடா்ந்து நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com