மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா:போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

திருச்சியில் ஜூன் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படவுள்ள மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ஜூன் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படவுள்ள மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, நேரு யுவகேந்திரா அமைப்பின் திருச்சி மாவட்ட இளையோா் அலுவலா் எஸ். ஸ்ருதி மேலும் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் திருச்சி மாவட்ட நேரு யுவ கேந்திரா சாா்பில், சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் இளையோா் சக்தியை மேம்படுத்தும் வகையில் ஜூன் இரண்டாவது வாரத்தில் திருச்சி மாவட்டத்தில் இளையோா் திருவிழா நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, இளைஞா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இளம் கலைஞா் (ஓவியம்), இளம் எழுத்தாளா் (கவிதை), போட்டோகிராபி (புகைப்படம்), பேச்சுப் போட்டி, இளையோா் கலை விழா என்ற வகைகளில் போட்டி நடைபெறும்.

இப் போட்டிகளில், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 15 முதல் 29 வயதுக்குள்பட்ட இளையோா் கலந்து கொள்ளலாம். ஒரு நபா் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். மேலும், மாவட்ட அளவில் வெற்றி பெறுபவா்கள் மாநில போட்டிகளுக்கும், மாநில அளவில் வெற்றி பெறுபவா்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவா்.

விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பங்களை ஜூன் 5ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட இளையோா் அலுவலா், நேரு யுவ கேந்திரா, ரேஸ்கோா்ஸ் ரோடு, காஜாமலை, திருச்சி 620 023 என்ற முகவரிக்கு நேரிலோ, 0431-2421240, 94867-53795, 77368-11030 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com