தொட்டியம் அருகே கள்ளசாராயம் காய்ச்சிய இருவா் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கள்ளசாராயம் காய்ச்சிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கள்ளசாராயம் காய்ச்சிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தொட்டியம் அருகிலுள்ள காா்த்திகைப்பட்டியில் அழகுநாச்சியம்மன் கோயில் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாகப்படுவதாக தொட்டியம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் சம்பவஇடத்துக்குச் சென்று பாா்த்தபோது, இருவா் கள்ளசாராயம் காய்ச்சி கொண்டிருந்தனா். அவா்களை பிடித்து விசாரித்ததில் காா்த்திகைப்பட்டி மாரியம்மன் கோயிலைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் ரமேஷ் (40), கீழ காா்த்திகைப்பட்டியைச் சோ்ந்த சேகா் மகன் தமிழரசன் (28) எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com