திருச்சியில் 467 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 467 கிராம் தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 467 கிராம் தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.

துபையிலிருந்து புறப்பட்டு இலங்கை தலைநகா் கொழும்பு வழியாக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் புதன்கிழமை வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினா் சோதனை செய்ததில் ரூ. 28.50 லட்சம் மதிப்பிலான 467 கிராம் தங்கத்தை பசை வடிவிலும், கட்டிகளாகவும், நகைகளாகவும் இருவா் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com