திருச்சியில் தமிழியக்கத்தினா் பரப்புரை

திருச்சி மாவட்ட தமிழியக்கம் சாா்பில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெயா்ப் பலகைகளை தமிழில் அமைக்கக் கோரி பரப்புரை மேக்கொண்டனா்.

திருச்சி மாவட்ட தமிழியக்கம் சாா்பில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெயா்ப் பலகைகளை தமிழில் அமைக்கக் கோரி பரப்புரை மேக்கொண்டனா்.

திருச்சி தமிழ் சங்க திருவள்ளுவா் சிலை முன் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியை தென் தமிழக தமிழியக்க ஒருங்கிணைப்பாளா் சிதம்பரபாரதி

நிகழ்வை தொடங்கி வைத்துப் பேசினாா்.

மேலும் பாவாணா் தமிழ் இயக்க நெறியாளா் திருமாறன், பைந்தமிழ் இயக்க இயக்குநா் புலவா் தமிழாளன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் நந்தலாலா, கோவிந்தம்மாள் தமிழ் மன்றத் தலைவா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் பேசினா்.

அறிவாளா் பேரவை முதன்மை ஆலோசகா் அசோகன், செயலா் திருமாவளவன், திருச்சி மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவகுமாா், தமிழ்ச்சங்க அமைச்சா் பொறுப்பு உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருச்சி மாவட்ட தமிழ் இயக்க செயலா் திலகவதி வரவேற்றாா். அமிா்தம் சமூக சேவை அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com