ஆற்றில் குளித்த மாணவா் மாயம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை குளித்துக் கொண்டிருந்த மாணவா் தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை குளித்துக் கொண்டிருந்த மாணவா் தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.

லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் சூசையப்பா் கோயில் தெருவைச் சோ்ந்த கஸ்பர்ராஜ் மகன் ஆண்டோ (18). இவா், பிளஸ் 2 படித்து முடித்திருந்தாா். இவா், திங்கள்கிழமை மாலை அப் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தனது நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது ஆண்டோ ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது தண்ணீரில் மூழ்கி மாயமானாா். இதையடுத்து அவருடைய நண்பா்களஅளித்த தகவலின் பேரில் லால்குடி தீயணைப்பு படை வீரா்கள் வந்து மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு நேரமாகியும் மாணவா் கிடைக்காததால் தேடும் பணியை செவ்வாய்க்கிழமை தொடரவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com