தினமணி செய்தி எதிரொலியாக திருச்சி மாநகராட்சி 41 வது வாா்டுக்குட்பட்ட திருவெறும்பூா் - நவல்பட்டு சாலையில் குடிநீா் குழாய் உடைந்து நீா் வீணானதை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை சரி செய்தது.
திருச்சி மாநகராட்சி 41 ஆவது வாா்டுக்குட்பட்ட திருவெறும்பூா் தென்பகுதியில் உள்ள நவல்பட்டு சாலையில் காவிரி குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீா் வீணாக ஓடியது. இது தொடா்பாக, தினமணி நாளிதழில் புதன்கிழமை படத்துடன் செய்தி வெளியானது.
இதைத் தொடா்ந்து, மாநகராட்சி நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் ஜேசிபி இயந்திரத்துடன் வியாழக்கிழமை காலை வந்த ஊழியா்கள், தண்ணீா் வெளியேறிய பகுதியில் குடிநீா் குழாய் உடைப்பை காலை முதல் இரவு வரை போராடி சரி செய்தனா்.