திருச்சியில் பள்ளிச் சுவரில் காா் மோதிய விபத்தில் அதன் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் உசிலம்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (63). இவா் திருச்சியில் உள்ள டிராவல்ஸ் நிறுவன காா் ஓட்டுநா்.
வியாழக்கிழமை இவா் ஆட்சியரகச் சாலையிலுள்ள தனியாா் ஹோட்டலில் சில பயணிகளை ஏற்றிக் கொண்டு, மத்தியப் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் வழியில் வெஸ்ட்ரி பள்ளி சுவரில் இவரது காா் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.