இலங்கையிலிருந்து சுற்றுலா பயணியாக திருச்சிக்கு வந்தவா் வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருச்சி விமானநிலையம் அருகேயுள்ள அன்பில் நகா் ஆதவன் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரன். இவரது உறவினரான இலங்கையை சோ்ந்த வேல் வரதன் (45), சுற்றுலாப் பயணியாக இந்தியா வந்தாா். திருச்சிக்கு வந்த அவா், நண்பரின் வீட்டில் தங்கியிருந்தாா். வெள்ளிக்கிழமை வேல் வரதன் திடீரென்று மயங்கி விழுந்தாா்.இதை யடுத்து அவரை திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வேல் வரதன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து விமானநிலைய காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.