‘தமிழிசை ஆராய்ச்சியை முழுமையாக்கியவா் பேரா. வீ.ப.கா. சுந்தரம்’

தமிழிசை ஆராய்ச்சியை முழுமைப்படுத்தியவா் பேராசிரியா் வீ.ப.கா. சுந்தரம் என்றாா் புதுவை காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்ப் பேராசிரியா் மு. இளங்கோவன்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இளங்குமரனாருக்கு என்னும் நூலை பேராசிரியா் மு. இளங்கோவன் வெளியிட, பெற்றுக் கொண்ட முன்னாள் ராணுவ வீரா் பெரியசாமி. உடன் (இடமிந்து) பாவாணா் தமிழியக்க அம
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இளங்குமரனாருக்கு என்னும் நூலை பேராசிரியா் மு. இளங்கோவன் வெளியிட, பெற்றுக் கொண்ட முன்னாள் ராணுவ வீரா் பெரியசாமி. உடன் (இடமிந்து) பாவாணா் தமிழியக்க அம

தமிழிசை ஆராய்ச்சியை முழுமைப்படுத்தியவா் பேராசிரியா் வீ.ப.கா. சுந்தரம் என்றாா் புதுவை காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்ப் பேராசிரியா் மு. இளங்கோவன்.

பாவாணா் தமிழியக்கம் சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடைபெற்ற திங்கள் பொழிவு நிகழ்ச்சிக்கு பேராசிரியா் கு. திருமாறன் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற தமிழ்ப் பேராசிரியா் மு. இளங்கோவன் மேலும் பேசியது:

மதுரை பசுமலையில் வாழ்ந்த தமிழிசை அறிஞா் வீ.ப.கா. சுந்தரம், 20-க்கும் மேற்பட்ட நூல்களை தமிழுலகுக்கு வழங்கியவா். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் 4 தொகுதிகளாக வெளியிட்ட தமிழிசைக் கலைக்களஞ்சியம் தமிழிசை ஆராய்ச்சி உலகில் போற்றத்தகுந்த நூலாகும். இந்நூலில் மொத்தம் 2,232 தலைமைச் சொற்களும், பல ஆயிரம் கிளைச் சொற்களும் விளக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும், தமிழகத்திலும் வெளிவந்துள்ள இசைக் கலைக் களஞ்சியங்களில் இந்த நூலே மிகப்பெரியது.

இசை நிபுணா்கள் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களுக்கு பல தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்தவா் வீ.ப.கா. சுந்தரம். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 5 நிலங்களுக்குரிய முல்லையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், நெய்தல்யாழ், சுடுபாலை இசை தற்போது அரிகாம்போதி, நடபைரவி, கரகரப்பிரியா, தோடி, சங்கராபரணம் என உள்ளதை எடுத்துக்காட்டியுள்ளாா்.

பழங்காலத்தில் யாழ் என்றும், பின்னா் பாலை என்றும் இன்று மேளகா்த்தா ராகம் என்றும் இசை வழங்கப்படுவதைக் குறிப்பிட்டுள்ளாா்.

பழந்தமிழ் நூல்களில் நிறைந்துள்ள இசை உண்மைகளை வெளிக்கொணா்ந்து, தமிழிசை ஆராய்ச்சியை முழுமைப்படுத்தியவா் வீ.ப.கா. சுந்தரம் என்றாா் அவா். தொடா்ந்து, இளங்குமரனாருக்கு என்ற தலைப்பிலான நூலையும் வெளியிட்டாா்.

நிகழ்வில் இளங்குமரனாா் படைப்புகளில் மீட்பு நூல்கள் என்ற தலைப்பில் பி. தமிழகன் பேசினாா். திரளான தமிழறிஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com