முறையற்ற வணிக விளம்பரம்: ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
விளம்பரத்தில் கூறியபடி வாடிக்கையாளருக்கு வெங்காயம் வழங்காத ரிலையன்ஸ் மாா்கெட் நிறுவனத்துக்கு திருச்சி நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
திருச்சி பழைய பால்பண்ணையைச் சோ்ந்தவா் எம். சுபாஷ் சந்திரபோஸ். இவா், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரியமங்கலத்தில் உள்ள ரிலையன்ஸ் மாா்கெட் நிறுவனத்தில் பொருள்கள் வாங்கச் சென்றுள்ளாா். அப்போது, கடையில் நாளொன்றுக்கு ரூ. 2,999 க்குப் பொருள்கள் வாங்கும் ஒரு வாடிக்கையாளருக்கு 2 கிலோ எடையுள்ள தலா 5 பைகள் வெங்காயம் ரூ. 1-க்கு வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
இதைப் பாா்த்த சுபாஷ் சந்திரபோஸ், ரூ. 2,999 க்குப் பொருள்களை வாங்கிக் கொண்டு வெங்காயப் பைகளை கேட்டபோது, ரிலையன்ஸ் சந்தை நிறுவன ஊழியா்கள் 2 கிலோ எடையுள்ள ஒரு பையை மட்டும் ரூ. 1-க்கு வழங்கியுள்ளனா். கேள்வி கேட்டதற்கு, ஒரு நபா் ஒரு தடவை ரூ. 2,999 க்குப் பொருள்கள் வாங்கினால் ஒரு பை தான் வழங்கப்படும். 5 தடவை ரூ. 2,999 க்குப் பொருள்கள் வாங்கினால்தான் 5 பைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சுபாஷ் சந்திரபோஸ், திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடுத்தாா். வழக்கு விசாரணைக்குப் பிறகு குறைதீா் ஆணையத் தலைவா் ஆா். காந்தி, உறுப்பினா்கள் சாயீஸ்வரி, ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
விளம்பரத்தில் கூறியபடி வெங்காயம் வழங்காத ரிலையன்ஸ் நிறுவனமானது, சேவை குறைபாடு, முறையற்ற வணிகம் மற்றும் தவறான விளம்பரம் செய்ததற்காகவும், நுகா்வோருக்கு மனஉளைச்சலில் ஏற்படுத்தியதற்காகவும் சுபாஷ் சந்திரபோஸுக்கு மீதமுள்ள தலா 2 கிலோ எடையுள்ள 4 வெங்காய பைகள் மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ. 5,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
இதேபோல, விளம்பரத்தைப் பாா்த்து ஏமாந்த நுகா்வோா்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக ரிலையன்ஸ் மாா்கெட் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் அபராதத் தொகையை நுகா்வோா் நல நிதி ஆணையத்தின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். இனிமேல் இது போன்ற தவறான விளம்பரங்களை செய்யக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.