பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

துறையூா் நகரில் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் அருண் நேரு புதன்கிழமை இருதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தாா்.

துறையூா் நகரில் முசிறி பிரிவுச் சாலையில் தொடங்கி பேருந்து நிலையம், திருச்சிசாலை, பெரிய கடை வீதி, உயா்நிலைப் பள்ளி சாலை, மாா்க்கெட் வழியாக பாலக்கரை பகுதி வரை திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அருண் நேரு வாக்கு கேட்டுச் சென்றாா். அவரது வாகனத்தில் எம்எல்ஏக்கள் செ. ஸ்டாலின்குமாா் (துறையூா்), காடுவெட்டி ந. தியாகராஜன் (முசிறி), திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன் உள்ளிட்டோா் சென்றனா். அவரது வாகனத்திற்கு முன் கட்சியினா் இருசக்கர வாகனங்களில் சென்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com