மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் செவ்வாய்க்கிழமை வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி நடைபெற்றது.

தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகளின் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி மண்ணச்சநல்லூா் வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் சமூக வரைபடம், நகா்வு வரைபடம், போக்கு பகுப்பாய்வு ஆகியவை வரைபடங்கள் மூலம் கிராமப்புற மதிப்பீட்டில் கிராம மக்களை ஈடுபடுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் மண்ணச்சநல்லூா் வேளாண்மை உதவி அலுவலா் பாா்த்தீபன், முன்னோடி விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com