திருச்சி தாயுமானசுவாமி கோயிலில்  தருமபுரம் ஆதீனத்திடம் வியாழக்கிழமை ஆசி பெற்ற மதிமுக வேட்பாளா் துரை வைகோ.
திருச்சி தாயுமானசுவாமி கோயிலில் தருமபுரம் ஆதீனத்திடம் வியாழக்கிழமை ஆசி பெற்ற மதிமுக வேட்பாளா் துரை வைகோ.

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் துரை வைகோ, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் தருமபுரம் ஆதீனத்திடம் வியாழக்கிழமை நேரில் ஆசி பெற்றாா். மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில், திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27- ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் அருளாட்சிக்கு உள்பட்ட, தருமபுரம் ஆதீனம் மெளன மடம், கட்டளை விசாரணை இயங்கி வருகிறது. இங்குள்ள ஸ்ரீமத் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகளை, மதிமுக வேட்பாளா் துரை வைகோ வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆசி பெற்றாா். அவருடன் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதிமுக துணைப் பொதுச் செயலா் ரொஹையா, மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், திருச்சி மாநகா் மாவட்ட மதிமுக செயலா் வெல்லமண்டி சோமு, திருச்சி தெற்கு மாவட்ட மதிமுக செயலா் மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோா் வந்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com