தண்டனை பெற்ற ஜானகிராமன், ராமலிங்கம்.
தண்டனை பெற்ற ஜானகிராமன், ராமலிங்கம்.

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

வழக்கிலிருந்து விவசாயி ஒருவரை விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் வனச்சரகா் மற்றும் வனப் பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சடையம்பட்டியைச் சோ்ந்தவா் வீரப்பன். விவசாயியான இவரது, உறவினரான முத்து என்பவா் கடந்த 2005-ஆம் ஆண்டில் தனது நிலத்திலிருந்த தேக்கு மரத்தை வெட்டிய குற்றத்துக்காக வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டாா்.

அப்போது, முத்து மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என மணப்பாறை வனச்சரகத்தில் அப்போது பணிபுரிந்த வனச்சரகா் ஜானகிராமன், வனப்பாதுகாவலா் ராமலிங்கம் ஆகிய இருவரும் கூறியுள்ளனா். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்து, இதுகுறித்து வீரப்பனிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து வனச்சரகா் ஜானகிராமன் மற்றும் வனப்பாதுகாவலா் ராமலிங்கம் மீது நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறையில் வீரப்பன் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், அப்போதைய திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. சுரேஷ்குமாா், ஆய்வாளா் பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் அவரது குழுவினா் ஆலோசனையின்பேரில், வனச்சரகா் ஜானகிராமன் மற்றும் வனப்பாதுகாவலா் ராமலிங்கத்திடம், வீரப்பன் ரூ.3 ஆயிரம் லஞ்சப் பணத்தை கொடுத்தபோது கையும் களவுமாக பிடித்தனா். இதையடுத்து இருவா் மீதும் திருச்சியில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கின் விசாரணை முடிவுற்று வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜானகிராமன், ராமலிங்கம் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மேலும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாத கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com