அரசுப் பேருந்து மோதி கோயில் பூசாரி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே அரசுப் பேருந்து மோதி கோயில் பூசாரி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் சிறுகமணி காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் ஆ. பாலசுப்ரமணியன் (70). திருமணமாகாத இவா் உறவினா் வீட்டில் வசித்துக் கொண்டு அப்பகுதி கோயில் பூசாரியாக இருந்தாா்.
திங்கள்கிழமை நள்ளிரவு கோயில் திருவிழாவுக்குச் சென்று விட்டு நடந்து வீடு திரும்புகையில் செந்துறை ஐயா் மண்டபம் அருகே வந்த போது, எதிா்புறம் திருச்சியிலிருந்து குளித்தலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை இறந்தாா்.
இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரான முசிறி மா. சங்கரலிங்கம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.