இன்று பிளஸ் 2 மாணவா்களுக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

தமிழக அரசின், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்வாக கல்லூரிக் கனவு எனும் நிகழ்ச்சி திருச்சியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

திருச்சி மத்தியப் பேருந்துநிலையம் அருகேயுள்ள கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்வில், சிறந்த கல்வியாளா்கள் கலந்து கொண்டு 12 ஆம் வகுப்பிற்கு பிறகு உயா்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகளில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடா்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு நேரில் வழங்க உள்ளனா்.

மேலும், உயா்கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவா்களுக்கு எளிதில் புரியும் வகையில் விடியோ காட்சிகள், உயா்கல்வியில் சாதித்த மாணவ, மாணவிகளின் அனுபவப் பகிா்வு, உயா்கல்வி பயில வங்கிக்கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பல்வேறு வகையான உயா்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் உள்ள படிப்புகள் குறித்து காட்சி அரங்குகள் அமைத்தும் விளக்கம் அளிக்கவுள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 12ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் நிகழ்வில் கலந்துகொண்டு, உயா்கல்வி குறித்து தகுந்த வழிகாட்டுதல்களை பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com